கள்ளாமை 281-290 | Thirukkural, திருக்குறள் 281 - 290 |
கள்ளாமை 281 - 290 திருக்குறள் 281 - 290
- எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. - உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். - களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். - களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். - அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். - அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். - களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். - அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. - அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். - கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.