கள்ளாமை 281-290 | Thirukkural, திருக்குறள் 281 - 290 |
Thirukkural, திருக்குறள் 281 - 290 :-
கள்ளாமை |
|
281 |
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் |
|
கள்ளாமை காக்க, தன் நெஞ்சு!. |
|
|
282 |
உள்ளத்தால் உள்ளலும் தீதே; ‘பிறன் பொருளைக் |
|
கள்ளத்தால் கள்வேம்’ எனல்!. |
|
|
283 |
களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து, |
|
ஆவது போல, கெடும். |
|
|
284 |
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் |
|
வீயா விழுமம் தரும். |
|
|
285 |
அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப் |
|
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
|
|
286 |
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார்-களவின்கண் |
|
கன்றிய காதலவர். |
|
|
287 |
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் |
|
ஆற்றல் புரிந்தார்கண் இல். |
|
|
288 |
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல, நிற்கும், |
|
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு. |
|
|
289 |
அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர்-களவு அல்ல |
|
மற்றைய தேற்றாதவர். |
|
|
290 |
கள்வார்க்குத் தள்ளும், உயிர்நிலை; கள்ளார்க்குத் |
|
தள்ளாது, புத்தேள் உலகு. |