கூடா ஒழுக்கம் 271-280 | Thirukkural, திருக்குறள் 271 - 280 |
Thirukkural, திருக்குறள் 271 - 280 :-
கூடா ஒழுக்கம் |
|
271 |
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் |
|
ஐந்தும் அகத்தே நகும். |
|
|
272 |
வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-தன் நெஞ்சம் |
|
தான் அறி குற்றபடின்?. |
|
|
273 |
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் |
|
புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று. |
|
|
274 |
தவம் மறைந்து, அல்லவை செய்தல்-புதல்மறைந்து |
|
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று. |
|
|
275 |
'பற்று அற்றேம்' என்பார் படிற்று ஒழுக்கம். ‘எற்று! எற்று!' என்று |
|
ஏதம் பலவும் தரும். |
|
|
276 |
நெஞ்சின் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து, |
|
வாழ்வாரின் வன்கணார் இல். |
|
|
277 |
புறம் குன்றி கண்டனையரேனும், அகம் குன்றி |
|
மூக்கில் கரியார் உடைத்து. |
|
|
278 |
மனத்தது மாசு ஆக, மாண்டார் நீர் ஆடி, |
|
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர். |
|
|
279 |
கணை கொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன |
|
வினைபடு பாலால் கொளல். |
|
|
280 |
மழித்தலும் நீட்டலும் வேண்டா- உலகம் |
|
பழித்தது ஒழித்துவிடின். |