தவம் 261-270 | Thirukkural, திருக்குறள் 261 - 270 |
Thirukkural, திருக்குறள் 261 - 270 :-
தவம் |
|
261 |
உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, |
|
அற்றே-தவத்திற்கு உரு. |
|
|
262 |
தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம், அதனை |
|
அஃது இலார் மேற்கொள்வது. |
|
|
263 |
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல்- |
|
மற்றையவர்கள், தவம்!. |
|
|
264 |
ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும், |
|
எண்ணின், தவத்தான் வரும். |
|
|
265 |
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான், செய் தவம் |
|
ஈண்டு முயலப்படும். |
|
|
266 |
தவம் செய்வார் தம் கருமம் செய்வார்; மற்று அல்லார் |
|
அவம் செய்வார், ஆசையுள் பட்டு. |
|
|
267 |
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும்-துன்பம் |
|
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு. |
|
|
268 |
தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய |
|
மன் உயிர் எல்லாம் தொழும். |
|
|
269 |
கூற்றம் குதித்தலும் கைகூடும்-நோற்றலின் |
|
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு. |
|
|
270 |
இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார் |
|
சிலர்; பலர் நோலாதவர். |