புலால் மறுத்தல் 251-260 | Thirukkural, திருக்குறள் 251 - 260 |
Thirukkural, திருக்குறள் 251 - 260 :-
புலால் மறுத்தல் |
|
251 |
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் |
|
எங்ஙனம் ஆளும் அருள்?. |
|
|
252 |
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருள் ஆட்சி |
|
ஆங்கு இல்லை, ஊன் தின்பவர்க்கு. |
|
|
253 |
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன் |
|
உடல் சுவை உண்டார் மனம். |
|
|
254 |
'அருள்', அல்லது, யாது?' எனின்,-கொல்லாமை, கோறல்: |
|
பொருள் அல்லது, அவ் ஊன் தினல். |
|
|
255 |
உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண, |
|
அண்ணாத்தல் செய்யாது, அளறு. |
|
|
256 |
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும் |
|
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல். |
|
|
257 |
உண்ணாமை வேண்டும், புலாஅல்-பிறிது ஒன்றன் |
|
புண்; அது உணர்வார்ப் பெறின். |
|
|
258 |
செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார், |
|
உயிரின் தலைப்பிரிந்த ஊன். |
|
|
259 |
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் |
|
உயிர் செகுத்து உண்ணாமை நன்று. |
|
|
260 |
கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி, |
|
எல்லா உயிரும் தொழும். |