அருள் உடைமை 241-250 | Thirukkural, திருக்குறள் 241 - 250 |
Thirukkural, திருக்குறள் 241 - 250 :-
அருள் உடைமை |
|
241 |
அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம் |
|
பூரியார்கண்ணும் உள.
|
242 |
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க! பல் ஆற்றான் |
|
தேரினும் அஃதே துணை.
|
243 |
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை-இருள் சேர்ந்த |
|
இன்னா உலகம் புகல்.
|
244 |
'மன் உயிர் ஓம்பி, அருள் ஆள்வாற்கு இல்' என்ப- |
|
‘தன் உயிர் அஞ்சும் வினை'.
|
245 |
அல்லல், அருள் ஆள்வார்க்கு இல்லை; வளி வழங்கும் |
|
மல்லல் மா ஞாலம் கரி.
|
246 |
'பொருள் நீங்கிப் பொச்சாந்தார்' என்பர்-'அருள் நீங்கி |
|
அல்லவை செய்து ஒழுகுவார்'.
|
247 |
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு |
|
இவ் உலகம் இல்லாகியாங்கு.
|
248 |
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார் |
|
அற்றார்; மற்று ஆதல் அரிது.
|
249 |
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்-தேரின், |
|
அருளாதான் செய்யும் அறம்.
|
250 |
வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின் |
|
மெலியார்மேல் செல்லும் இடத்து. |