புகழ் 231-240 | Thirukkural, திருக்குறள் 231 - 240 |
Thirukkural, திருக்குறள் 231 - 240 :-
புகழ் |
|
231 |
ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது |
|
ஊதியம் இல்லை, உயிர்க்கு.
|
232 |
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று |
|
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
|
233 |
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், |
|
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
|
234 |
நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப் |
|
போற்றாது, புத்தேள் உலகு.
|
235 |
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும், |
|
வித்தகர்க்கு அல்லால் அரிது.
|
236 |
தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார் |
|
தோன்றலின் தோன்றாமை நன்று.
|
237 |
புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை |
|
இகழ்வாரை நோவது எவன்?.
|
238 |
'வசை' என்ப, வையத்தார்க்கு எல்லாம்-’இசை’ என்னும் |
|
எச்சம் பெறாஅவிடின்.
|
239 |
வசை இலா வண் பயன் குன்றும்-இசை இலா |
|
யாக்கை பொறுத்த நிலம்.
|
240 |
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய |
|
வாழ்வாரே வாழாதவர். |