ஈகை 221-230 | Thirukkural, திருக்குறள் 221 - 230 |
ஈகை 221 - 230 திருக்குறள் 221 - 230
- வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. - நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. - இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. - ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். - அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. - பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. - ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். - சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.