ஈகை 221-230 | Thirukkural, திருக்குறள் 221 - 230 |
Thirukkural, திருக்குறள் 221 - 230 :-
ஈகை |
|
221 |
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம் |
|
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
|
222 |
'நல்லாறு' எனினும், கொளல் தீது; ‘மேல் உலகம் |
|
இல்’ எனினும், ஈதலே நன்று.
|
223 |
'இலன்' என்னும் எவ்வம் உரையாமை ஈதல் |
|
குலன் உடையான்கண்ணே உள.
|
224 |
இன்னாது, இரக்கப்படுதல்-இரந்தவர் |
|
இன் முகம் காணும் அளவு.
|
225 |
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப் பசியை |
|
மாற்றுவார் ஆற்றலின் பின்.
|
226 |
அற்றார் அழி பசி தீர்த்தல்! அஃது ஒருவன் |
|
பெற்றான் பொருள் வைப்பு உழி.
|
227 |
பாத்து ஊண் மரீஇயவனைப் பசி என்னும் |
|
தீப் பிணி தீண்டல் அரிது.
|
228 |
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-தாம் உடைமை |
|
வைத்து இழக்கும் வன் கணவர்?.
|
229 |
இரத்தலின் இன்னாது மன்ற-நிரப்பிய |
|
தாமே தமியர் உணல்.
|
230 |
சாதலின் இன்னாதது இல்லை; இனிது, அதூஉம் |
|
ஈதல் இயையாக்கடை. |