ஒப்புரவு அறிதல் 211-220 | Thirukkural, திருக்குறள் 211 - 220 |
Thirukkural, திருக்குறள் 211 - 220 :-
ஒப்புரவு அறிதல் |
|
211 |
கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு |
|
என் ஆற்றும் கொல்லோ, உலகு?.
|
212 |
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு |
|
வேளாண்மை செய்தற்பொருட்டு.
|
213 |
புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே- |
|
ஒப்புரவின் நல்ல பிற.
|
214 |
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான் |
|
செத்தாருள் வைக்கப்படும்.
|
215 |
ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம் |
|
பேர் அறிவாளன் திரு.
|
216 |
பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்-செல்வம் |
|
நயன் உடையான்கண் படின்.
|
217 |
மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால்-செல்வம் |
|
பெருந்தகையான்கண் படின்.
|
218 |
இடன் இல் பருவத்தும், ஒப்புரவிற்கு ஒல்கார்- |
|
கடன் அறி காட்சியவர்.
|
219 |
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர |
|
செய்யாது அமைகலா ஆறு.
|
220 |
'ஒப்புரவினால் வரும், கேடு' எனின், அஃது ஒருவன் |
|
விற்றுக் கோள் தக்கது உடைத்து. |