தீவினை அச்சம் 201 - 210 | Thirukkural, திருக்குறள் 201 - 210 |
Thirukkural, திருக்குறள் 201 - 210 :-
தீவினை அச்சம் |
|
201 |
தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்- |
|
தீவினை என்னும் செருக்கு.
|
202 |
தீயவை தீய பயத்தலான், தீயவை |
|
தீயினும் அஞ்சப்படும்.
|
203 |
அறிவினுள் எல்லாம் தலை என்ப-தீய |
|
செறுவார்க்கும் செய்யா விடல்.
|
204 |
மறந்தும் பிறன் கேடு சூழற்க! சூழின், |
|
அறம் சூழும், சூழ்ந்தவன் கேடு.
|
205 |
'இலன்' என்று தீயவை செய்யற்க! செய்யின், |
|
இலன் ஆகும், மற்றும் பெயர்த்து.
|
206 |
தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப் பால |
|
தன்னை அடல் வேண்டாதான்!.
|
207 |
எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை |
|
வீயாது, பின் சென்று, அடும்.
|
208 |
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை |
|
வீயாது அடி உறைந்தற்று.
|
209 |
தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும் |
|
துன்னற்க, தீவினைப் பால்!.
|
210 |
அருங் கேடன் என்பது அறிக-மருங்கு ஓடித் |
|
தீவினை செய்யான் எனின்?. |