பயன் இல சொல்லாமை 191 - 200 | Thirukkural, திருக்குறள் 191 - 200 |
Thirukkural, திருக்குறள் 191 - 200 :-
பயன் இல சொல்லாமை |
|
191 |
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் |
|
எல்லாரும் எள்ளப்படும்.
|
192 |
பயன் இல பல்லார்முன் சொல்லல், நயன் இல |
|
நட்டார்கண் செய்தலின் தீது.
|
193 |
நயன் இலன் என்பது சொல்லும்-பயன் இல |
|
பாரித்து உரைக்கும் உரை.
|
194 |
நயன் சாரா நன்மையின் நீக்கும்-பயன் சாராப் |
|
பண்பு இல் சொல் பல்லாரகத்து.
|
195 |
சீர்மை சிறப்பொடு நீங்கும்-பயன் இல |
|
நீர்மை உடையார் சொலின்.
|
196 |
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்! |
|
மக்கட் பதடி எனல்!.
|
197 |
நயன் இல சொல்லினும் சொல்லுக! சான்றோர் |
|
பயன் இல சொல்லாமை நன்று.
|
198 |
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்- |
|
பெரும் பயன் இல்லாத சொல்.
|
199 |
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்-மருள் தீர்ந்த |
|
மாசு அறு காட்சியவர்.
|
200 |
சொல்லுக, சொல்லில் பயன் உடைய! சொல்லற்க, |
|
சொல்லில் பயன் இலாச் சொல்!. |