இனியவை கூறல் 91 - 100 | Thirukkural, திருக்குறள் 91 - 100 |
திருக்குறள் 91 - 100 :-
இனியவை கூறல் |
|
91 |
இன் சொல்-ஆல் ஈரம் அளைஇ, படிறு இலஆம் |
|
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.
|
92 |
அகன் அமர்ந்து ஈதலின் நன்றேமுகன் அமர்ந்து |
|
இன்சொலன் ஆகப்பெறின்.
|
93 |
முகத்தான் அமர்ந்து, இனிது நோக்கி, அகத்தான் ஆம் |
|
இன் சொலினதே அறம்.
|
94 |
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
|
இன்புறூஉம் இன்சொலவர்க்கு.
|
95 |
பணிவு உடையன், இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
|
அணி; அல்ல, மற்றுப் பிற. |
96 |
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை |
|
நாடி, இனிய சொலின்.
|
97 |
நயன் ஈன்று நன்றி பயக்கும்பயன் ஈன்று |
|
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
|
98 |
சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும் |
|
இம்மையும், இன்பம் தரும்.
|
99 |
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ- |
|
வன் சொல் வழங்குவது?.
|
100 |
இனிய உளவாக இன்னாத கூறல்- |
|
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று. |