விருந்து ஓம்பல் 81 - 90 | Thirukkural, திருக்குறள் 81 - 90 |
Thirukkural, திருக்குறள் 81 - 90 : -
விருந்து ஓம்பல் |
|
81 |
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி |
|
வேளாண்மை செய்தற்பொருட்டு.
|
82 |
விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா |
|
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று.
|
83 |
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
|
பருவந்து பாழ்படுதல் இன்று.
|
84 |
அகன் அமர்ந்து செய்யாள் உறையும்-முகன் அமர்ந்து |
|
நல் விருந்து ஓம்புவான் இல்.
|
85 |
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ-விருந்து ஓம்பி, |
|
மிச்சில் மிசைவான் புலம்?.
|
86 |
செல் விருந்து ஓம்பி, வரு விருந்து பார்த்திருப்பான் |
|
நல் விருந்து, வானத்தவர்க்கு.
|
87 |
இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின் |
|
துணைத் துணை-வேள்விப் பயன்.
|
88 |
பரிந்து ஓம்பி, பற்று அற்றேம்' என்பர்-விருந்து ஓம்பி |
|
வேள்வி தலைப்படாதார்.
|
89 |
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா |
|
மடமை; மடவார்கண் உண்டு.
|
90 |
மோப்பக் குழையும் அனிச்சம்;- முகம் திரிந்து |
|
நோக்கக் குழையும் விருந்து. |