அன்பு உடைமை 71 - 80 | Thirukkural, திருக்குறள் 71 - 80 |
Thirukkural, அன்பு உடைமை 71 - 80 :-
அன்பு உடைமை |
|
71 |
அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்?ஆர்வலர் |
|
புன்கண்நீர் பூசல் தரும்.
|
72 |
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார் |
|
என்பும் உரியர், பிறர்க்கு.
|
73 |
'அன்போடு இயைந்த வழக்கு' என்ப-'ஆர் உயிர்க்கு |
|
என்போடு இயைந்த தொடர்பு'.
|
74 |
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும், |
|
‘நண்பு’ என்னும் நாடாச் சிறப்பு.
|
75 |
அன்புற்று அமர்ந்த வழக்கு' என்ப-'வையகத்து |
|
இன்புற்றார் எய்தும் சிறப்பு'.
|
76 |
'அறத்திற்கே அன்பு சார்பு' என்ப, அறியார்; |
|
மறத்திற்கும் அஃதே துணை.
|
77 |
என்பு இலதனை வெயில் போலக் காயுமே- |
|
அன்பு இலதனை அறம்.
|
78 |
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் |
|
வற்றல்மரம் தளிர்த்தற்று.
|
79 |
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-யாக்கை |
|
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு?.
|
80 |
அன்பின் வழியது உயிர்நிலை; அஃது இலார்க்கு |
|
என்பு தோல் போர்த்த உடம்பு. |