புதல்வரைப் பெறுதல் 61 - 70 | Thirukkural, திருக்குறள் 61 - 70 |
Thirukkural, திருக்குறள் 61 - 70 :-
புதல்வரைப் பெறுதல் |
|
61 |
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த |
|
மக்கட்பேறு அல்ல பிற.
|
62 |
எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப் |
|
பண்புடை மக்கட் பெறின்.
|
63 |
தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள் |
|
தம்தம் வினையால் வரும்.
|
64 |
அமிழ்தினும் ஆற்ற இனிதே-தம் மக்கள் |
|
சிறு கை அளாவிய கூழ்.
|
65 |
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; மற்று அவர் |
|
சொல் கேட்டல் இன்பம், செவிக்கு.
|
66 |
'குழல் இனிது; யாழ் இனிது' என்ப-தம் மக்கள் |
|
மழலைச் சொல் கேளாதவர்.
|
67 |
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து |
|
முந்தி இருப்பச் செயல்.
|
68 |
தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து |
|
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.
|
69 |
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தன் மகனைச் |
|
சான்றோன் எனக் கேட்ட தாய்.
|
70 |
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை |
|
என் நோற்றான்கொல்!’ எனும் சொல். |