வாழ்க்கைத்துணை நலம் 51 - 60 | Thirukkural, திருக்குறள் 51 - 60 |
திருக்குறள் 51 - 60
வாழ்க்கைத்துணை நலம் |
|
51 |
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான் |
|
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை.
|
52 |
மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின், வாழ்க்கை |
|
எனைமாட்சித்து ஆயினும், இல்.
|
53 |
இல்லது என், இல்லவள் மாண்புஆனால்? உள்ளது என், |
|
இல்லவள் மாணாக்கடை?.
|
54 |
பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும் |
|
திண்மை உண்டாகப்பெறின்?.
|
55 |
தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள், |
|
‘பெய்’ என, பெய்யும் மழை.
|
56 |
தற்காத்து, தற் கொண்டாற் பேணி, தகை சான்ற |
|
சொற்காத்து, சோர்வு இலாள்-பெண்.
|
57 |
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் |
|
நிறை காக்கும் காப்பே தலை.
|
58 |
பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப் |
|
புத்தேளிர் வாழும் உலகு.
|
59 |
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன் |
|
ஏறுபோல் பீடு நடை.
|
60 |
'மங்கலம்' என்ப, மனைமாட்சி; மற்று அதன் |
|
நன்கலம் நன் மக்கட் பேறு. |