இல்வாழ்க்கை 41 - 50 | Thirukkural, திருக்குறள் 41 - 50 |
இல்லற இயல் |
|
இல்வாழ்க்கை |
|
41 |
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் |
|
நல்லாற்றின் நின்ற துணை.
|
42 |
துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், |
|
இல்வாழ்வான் என்பான் துணை.
|
43 |
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு |
|
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
|
44 |
பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை |
|
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.
|
45 |
அன்பும் அறனும் உடைத்துஆயின், இல்வாழ்க்கை |
|
பண்பும் பயனும் அது.
|
46 |
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில் |
|
போஒய்ப் பெறுவது எவன்?.
|
47 |
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
|
முயல்வாருள் எல்லாம் தலை.
|
48 |
ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை |
|
நோற்பாரின் நோன்மை உடைத்து.
|
49 |
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் |
|
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று.
|
50 |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் |
|
தெய்வத்துள் வைக்கப்படும். |