புறம் கூறாமை 181 - 190 | Thirukkural, திருக்குறள் 181 - 190 |
Thirukkural, திருக்குறள் 181 - 190 :-
புறம் கூறாமை |
|
181 |
அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன் |
|
புறம் கூறான் என்றல் இனிது.
|
182 |
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே- |
|
புறன் அழீஇப் பொய்த்து நகை.
|
183 |
புறம் கூறி, பொய்த்து, உயிர் வாழ்தலின், சாதல் |
|
அறம் கூறும் ஆக்கம் தரும்.
|
184 |
கண் நின்று, கண் அறச் சொல்லினும், சொல்லற்க- |
|
முன் இன்று பின் நோக்காச் சொல்.
|
185 |
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் |
|
புன்மையால் காணப்படும்.
|
186 |
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் |
|
திறன் தெரிந்து கூறப்படும்.
|
187 |
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்-நகச் சொல்லி |
|
நட்பு ஆடல் தேற்றாதவர்.
|
188 |
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார், |
|
என்னைகொல், ஏதிலார்மாட்டு?.
|
189 |
அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம்-புறன் நோக்கிப் |
|
புன் சொல் உரைப்பான் பொறை.
|
190 |
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின், |
|
தீது உண்டோ, மன்னும் உயிரக்கு? |