வெஃகாமை 171 - 180 | Thirukkural, திருக்குறள் 171 - 180 |
Thirukkural, திருக்குறள் 171 - 180 :-
வெஃகாமை |
|
171 |
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின், குடி பொன்றி, |
|
குற்றமும் ஆங்கே தரும்.
|
172 |
படு பயன் வெஃகி, பழிப்படுவ செய்யார்- |
|
நடுவு அன்மை நாணுபவர்.
|
173 |
சிற்றின்பம் வெஃகி, அறன் அல்ல செய்யாரே- |
|
மற்று இன்பம் வேண்டுபவர்.
|
174 |
'இலம்' என்று வெஃகுதல் செய்யார்-புலம் வென்ற |
|
புன்மை இல் காட்சியவர்.
|
175 |
அஃகி அகன்ற அறிவு என் ஆம்-யார்மாட்டும் |
|
வெஃகி, வெறிய செயின்?.
|
176 |
அருள் வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப் |
|
பொல்லாத சூழ, கெடும்.
|
177 |
வேண்டற்க, வெஃகி ஆம் ஆக்கம்-விளைவயின் |
|
மாண்டற்கு அரிது ஆம் பயன்!.
|
178 |
'அஃகாமை செல்வத்திற்கு யாது?' எனின், வெஃகாமை |
|
வேண்டும் பிறன் கைப் பொருள்.
|
179 |
அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்- |
|
திறன் அறிந்து ஆங்கே திரு.
|
180 |
இறல் ஈனும், எண்ணாது வெஃகின்; விறல் ஈனும், |
|
வேண்டாமை என்னும் செருக்கு. |