அழுக்காறாமை 161 - 170 | Thirukkural, திருக்குறள் 161 - 170 |
Thirukkural, திருக்குறள் 161 - 170 :-
அழுக்காறாமை |
|
161 |
ஒழுக்கு ஆறாக் கொள்க-ஒருவன் தன் நெஞ்சத்து |
|
அழுக்காறு இலாத இயல்பு.
|
162 |
விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை-யார்மாட்டும் |
|
அழுக்காற்றின் அன்மை பெறின்.
|
163 |
அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் |
|
பேணாது அழுக்கறுப்பான்.
|
164 |
அழுக்காற்றின் அல்லவை செய்யார்-இழுக்கு ஆற்றின் |
|
ஏதம் படுபாக்கு அறிந்து.
|
165 |
அழுக்காறு உடையார்க்கு அது சாலும்- ஒன்னார் |
|
வழுக்கியும் கேடு ஈன்பது.
|
166 |
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
|
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
|
167 |
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
|
தவ்வையைக் காட்டி விடும்.
|
168 |
அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று, |
|
தீயுழி உய்த்துவிடும்.
|
169 |
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் |
|
கேடும், நினைக்கப்படும்.
|
170 |
அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃது இல்லார் |
|
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். |