பொறை உடைமை 151 - 160 | Thirukkural, திருக்குறள் 151 - 160 |
Thirukkural, திருக்குறள் 151 - 160 :-
பொறை உடைமை |
|
151 |
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை |
|
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
|
152 |
பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை |
|
மறத்தல் அதனினும் நன்று.
|
153 |
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்; வன்மையுள் |
|
வன்மை மடவார்ப் பொறை.
|
154 |
நிறை உடைமை நீங்காமை வேண்டின், பொறை உடைமை |
|
போற்றி ஒழுகப்படும்.
|
155 |
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர், |
|
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
|
156 |
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப் |
|
பொன்றும் துணையும் புகழ்.
|
157 |
திறன் அல்ல தன்-பிறர் செய்யினும், நோ நொந்து, |
|
அறன் அல்ல செய்யாமை நன்று.
|
158 |
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம் |
|
தகுதியான் வென்றுவிடல்!.
|
159 |
துறந்தாரின் தூய்மை உடையர்-இறந்தார்வாய் |
|
இன்னாச் சொல் நோற்கிற்பவர்.
|
160 |
உண்ணாது நோற்பார் பெரியர்-பிறர் சொல்லும் |
|
இன்னாச் சொல் நோற்பாரின் பின். |