ஒழுக்கம் உடைமை 131 - 140 | Thirukkural, திருக்குறள் 131 - 140 |
Thirukkural, திருக்குறள் 131 - 140 :-
ஒழுக்கம் உடைமை |
|
131 |
ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் |
|
உயிரினும் ஓம்பப்படும்.
|
132 |
பரிந்து ஓம்பிக் காக்க, ஒழுக்கம்-தெரிந்து ஓம்பித் |
|
தேரினும், அஃதே துணை!.
|
133 |
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் |
|
இழிந்த பிறப்பாய் விடும்.
|
134 |
மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான் |
|
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.
|
135 |
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை- |
|
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
|
136 |
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்-இழுக்கத்தின் |
|
ஏதம் படுபாக்கு அறிந்து.
|
137 |
ஒழுக்கத்தின் எய்துவர், மேன்மை; இழுக்கத்தின் |
|
எய்துவர், எய்தாப் பழி.
|
138 |
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்; தீ ஒழுக்கம் |
|
என்றும் இடும்பை தரும்.
|
139 |
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே-தீய |
|
வழுக்கியும், வாயால் சொலல்.
|
140 |
உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும், |
|
கல்லார் அறிவிலாதார். |