அடக்கம் உடைமை 121 - 130 | Thirukkural, திருக்குறள் 121 - 130 |
Thirukkural, திருக்குறள் 121 - 130 :-
அடக்கம் உடைமை |
|
121 |
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை |
|
ஆர் இருள் உய்த்துவிடும்.
|
122 |
காக்க, பொருளா அடக்கத்தை-ஆக்கம் |
|
அதனின் ஊங்கு இல்லை, உயிர்க்கு!.
|
123 |
செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து |
|
ஆற்றின் அடங்கப் பெறின்.
|
124 |
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் |
|
மலையினும் மாணப் பெரிது.
|
125 |
எல்லார்க்கும் நன்று ஆம், பணிதல்; அவருள்ளும் |
|
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
|
126 |
ஒருமையுள், ஆமைபோல், ஐந்து அடக்கல் ஆற்றின், |
|
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
|
127 |
யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால், |
|
சோகாப்பர், சொல் இழுக்குப் பட்டு.
|
128 |
ஒன்றானும் தீச்சொற் பொருட் பயன் உண்டாயின், |
|
நன்று ஆகாது ஆகிவிடும்.
|
129 |
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்;- ஆறாதே |
|
நாவினால் சுட்ட வடு.
|
130 |
கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி |
|
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |

