நடுவு நிலைமை 111 - 120 | Thirukkural, திருக்குறள் 111 - 120 |
Thirukkural, திருக்குறள் 111 - 120 :-
நடுவு நிலைமை |
|
111 |
தகுதி என ஒன்றும் நன்றே-பகுதியான் |
|
பாற்பட்டு ஒழுகப்பெறின்.
|
112 |
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி, |
|
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
|
113 |
நன்றே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை |
|
அன்றே ஒழியவிடல்!.
|
114 |
தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் |
|
எச்சத்தால் காணப்படும்.
|
115 |
கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக் |
|
கோடாமை சான்றோர்க்கு அணி.
|
116 |
கெடுவல் யான்' என்பது அறிக-தன் நெஞ்சம் |
|
நடுவு ஓரீஇ, அல்ல செயின்.
|
117 |
கெடுவாக வையாது உலகம்-நடுவாக |
|
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
|
118 |
சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால் |
|
கோடாமை-சான்றோர்க்கு அணி.
|
119 |
சொற் கோட்டம் இல்லது, செப்பம்-ஒருதலையா |
|
உட் கோட்டம் இன்மை பெறின்.
|
120 |
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப் |
|
பிறவும் தமபோல் செயின். |