செய்ந்நன்றி அறிதல் 101 - 110 | Thirukkural, திருக்குறள் 101 - 110 |
Thirukkural, திருக்குறள் 101 - 110 :-
செய்ந்நன்றி அறிதல் |
|
101 |
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
|
வானகமும் ஆற்றல் அரிது.
|
102 |
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், |
|
ஞாலத்தின் மாணப் பெரிது.
|
103 |
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின், |
|
நன்மை கடலின் பெரிது.
|
104 |
தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாக் |
|
கொள்வர்-பயன் தெரிவார்.
|
105 |
உதவி வரைத்து அன்று, உதவி; உதவி |
|
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
|
106 |
மறவற்க, மாசு அற்றார் கேண்மை! துறவற்க, |
|
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு!.
|
107 |
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்-தம்கண் |
|
விழுமம் துடைத்தவர் நட்பு.
|
108 |
நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது |
|
அன்றே மறப்பது நன்று. |
109 |
கொன்றன்ன இன்னா செயினும், அவர் செய்த |
|
ஒன்றும் நன்று உள்ள,கெடும்.
|
110 |
எந் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வு இல்லை, |
|
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |