Thirukkural 1-10 | திருக்குறள் 1 - 10 |
அறத்துப்பால்,
பாயிரம்,
கடவுள் வாழ்த்து :-
1 அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி-
பகவன் முதற்றே, உலகு.
2 கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்.
3 மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
4 வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5 இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு.
6 பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.
7 தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.
8 அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
பிற ஆழி நீந்தல் அரிது.
9 கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10 பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
இறைவன் அடி சேராதார்.