அறன் வலியுறுத்தல் 31 - 40 | Thirukkural, திருக்குறள் 31 - 40 |
அறன் வலியுறுத்தல் - Thirukkural
அறன் வலியுறுத்தல் |
|
31 |
சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு |
|
ஆக்கம் எவனோ, உயிர்க்கு.
|
32 |
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை |
|
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
|
33 |
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
|
செல்லும் வாய் எல்லாம் செயல்.
|
34 |
மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்; |
|
ஆகுல நீர, பிற.
|
35 |
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும் |
|
இழுக்கா இயன்றது-அறம்.
|
36 |
'அன்று அறிவாம்' என்னாது, அறம் செய்க; மற்று அது |
|
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
|
37 |
'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை |
|
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.
|
38 |
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் |
|
வாழ் நாள் வழி அடைக்கும் கல்.
|
39 |
அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் |
|
புறத்த; புகழும் இல.
|
40 |
செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு |
|
உயற்பாலது ஓரும் பழி. |