நீத்தார் பெருமை 21 - 30 | Thirukkural, திருக்குறள் 21 - 30 |
நீத்தார் பெருமை |
|
21 |
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
|
வேண்டும்- பனுவல் துணிவு.
|
22 |
துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து |
|
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.
|
23 |
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் |
|
பெருமை பிறங்கிற்று, உலகு.
|
24 |
உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான் |
|
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
|
25 |
ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான் |
|
இந்திரனே சாலும், கரி.
|
26 |
செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர் |
|
செயற்கு அரிய செய்கலாதார்
|
27 |
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின் |
|
வகை தெரிவான்கட்டே-உலகு
|
28 |
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
|
மறைமொழி காட்டிவிடும்.
|
29 |
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி |
|
கணம் ஏயும், காத்தல் அரிது.
|
30 |
அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும் |
|
செந் தண்மை பூண்டு ஒழுகலான் |