வான் சிறப்பு 11 - 20 | Thirukkural, திருக்குறள் |
வான் சிறப்பு |
|
11 |
வான் நின்று உலகம் வழங்கி வருதலான், |
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று. |
|
12 |
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத் |
துப்பு ஆயதூஉம் மழை. |
|
13 |
விண் இன்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து- |
உள் நின்று உடற்றும் பசி. |
|
14 |
ஏரின் உழாஅர் உழவர், புயல் என்னும் |
வாரி வளம் குன்றிக்கால். |
|
15 |
கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே |
எடுப்பதூஉம், எல்லாம் மழை. |
|
16 |
விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே |
பசும் புல் தலை காண்பு அரிது. |
|
17 |
நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி- |
தான் நல்காது ஆகிவிடின். |
|
18 |
சிறப்பொடு பூசனை செல்லாது-வானம் |
வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு. |
|
19 |
தானம் தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம் |
வானம் வழங்காது எனின். |
|
20 |
நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும் |
வான் இன்று அமையாது ஒழுக்கு. |